Friday, August 7, 2020

ஊமைக்காலத்தில்

மரங்களின் கீழ் இலைமுகிலின் மழையில் நனையும் பொழுது உன் ஞாபகம்...!

என் மனதின் மடியில் படுத்துறங்கும்
விலகிய காலங்கள்
விழித்துக்கொள்ளும்...!
மௌனங்களின் சத்தத்தில்
பார்வைகளின் யுத்தத்தில்
நாம் பாதை போட்டுக்கொண்ட
ஞாபகம்...!!
நாம் இன்னும் நெருங்கியிருக்கலாம்..
இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால்...!!
காதலும் நட்பும்
அடித்துக்கொண்டன..
நீயா..
நானா..
என்று...!
நீ ஆரம்பத்திலேயே
முடிவு எடுத்து விட்டாய்..
உன் முடிவுக்குப்பிறகும்
நான் ஆரம்பத்திலேயே இருக்கிறேன்...!
நீ என்னுடன்
இருந்த நேரங்களை விட
இல்லாத நேரங்களில்தான்
நீ என்னுடன் அதிகமாக
இருந்திருக்கிறாய்..!
நேரங்களையும் யுகங்களையும்
உதறித்தள்ளி காத்திருப்போம்..
உலகம் உருகிப்போயிருக்கும் ஒரு
ஊமைக்காலத்தில் சேர்ந்திருப்போம்...!!!

No comments:

Post a Comment