Tuesday, August 21, 2012

நாதஸ்வரம் டைரக்டர் நல்லவரா? கெட்டவரா?


டைரக்டர் ஹீரோவானால் என்ன அட்வாண்டேஜ்? அவங்க விரும்பின
கேரக்டர்களில் நடிச்சுக்கலாம். பிடிச்ச ஹீரோயினை 'பிடிச்சி போட்டுக்கலாம்'.
தங்கள் விருப்பம் போல் பில்டப் கொடுத்து பந்தா பண்ணலாம்.

இந்த லிஸ்டில் இயக்குனர்கள் சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சின்னத்திரையை பொறுத்தவரையில் நாதஸ்வரம் இயக்குனர் திருமுருகனை
இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

இந்த சீரியலில் இவர் பெயர் கோபி. அப்பாவி கேரக்டர். அன்பான கணவன்(ஹோம்லியான அழகான ஹீரோயினை பிடித்து போட்டிருக்கிறார்). பொறுப்பான அண்ணன். எல்லாம் சரி. ஆரம்பத்திலிருந்து இந்த சீரியலை பார்த்து வருகிறவர்களுக்குத் தெரிந்திருக்கும். தொடரில் இவரைத் தவிர மற்ற ஆண்கள் யாருமே நல்லவர்கள் இல்லை.

கோபியின் தம்பி பாண்டியை ஆரம்பித்திலிருந்து ஒரு பொறுக்கியாக காண்பித்து கடைசியில்
ஆளை காலி பண்ணிவிட்டார்கள். தங்கச்சி புருஷன் செல்வரங்கம் முதலில் நல்லவரகத்தான் இருந்தார்.
பிறகு சின்னவீடு செட்டப் ஆது இது என இமேஜை கெடுத்துவிட்டனர்.

ஹீரோயினை முதல் திருமணம் செய்த கோகுல் ஒரு சைக்கோ. ஹீரோயின் அண்ணன் ஒரு குடிகாரன்.
சித்தப்பாவின் மூத்த மருமகன் கோபக்காரன். அம்மா பேச்சை கேட்டு மனைவியை கொடுமை படுத்துகிறான். கோபியின் தங்கை பரமுவுக்கு முதலில் பார்த்த மாப்பிள்ளை ஒரு ரவுடி.
பரமுவின் கணவன் மனைவி பேச்சை கேட்டு அம்மாவை மதிப்பதில்லை..பக்கத்து வீட்டு ஜோசியக்காரன் வில்லன்.
பிறகு கோபியின் சித்தப்பாவும் வில்லனைகிவிட்டார்.

தற்போது கோபியின் இரண்டாவது தங்கை ராகினிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இன்னொரு சைக்கோ. இதுதவிர மகா என்ற பெண் கேரக்டரிடம்  ஜொள்ளு விடும் வாத்தியார் ஒருவரும் இருக்கிறார்.

கோபியின் அத்தை பையனாக வரும் சம்பந்தம் நல்லவன். அப்பாவி.  என்றாலும் அரை லூசு போலவே காட்டுகிறார்கள்.

இப்போது புரிகிறதா இயக்குனரின் சாமர்த்தியம்.

இருந்தாலும் தொடர் விறுவிறுப்பாகதான் இருக்கிறது. ஹீ..ஹீ.