Thursday, March 22, 2012

நீ காதலித்த எதையாவது கொடு


நான் உன் கதவை தட்டவில்லை.
ஜன்னலை தட்டுகிறேன்.

விழிகள் மூடிக்கொள்ளத்தான்
இமைகள்.
இதயத்தையும்
ஏன் இமைகளால் மூடுகிறாய்.

நான் உன் முகம்
பார்க்க கேட்கவில்லை
உன் முகம் பார்த்த
கண்ணாடி பார்க்கக் கேட்கிறேன்.

நான்
உன் காதல் கேட்கவில்லை.
நீ காதலித்த
எதையாவது கொடு
என கேட்கிறேன்.

Thursday, March 8, 2012

இமைகளுக்கு இடையில் நீ




பலமுறை கேட்டும்
நீ
இதற்கு பதில் சொன்னதில்லை.
ஒரு வேளை
உன் அழகின் ரகசியம்
இதுதானோ?





இருள் வரும்போதெல்லாம் 
இடறி விழுகிறேன்
இமைகளுக்கு இடையில்
நீ






உன் ஒவ்வொரு
கண் சிமிட்டலும்
எனக்கு கவிதை



சமயங்களில்
நான் உறங்குவதில்லை,
உன் நினைவு கலைந்துவிடுமோ
என்ற கவலையில்.






உனக்கும் எனக்குமான தூரத்தை
இதுவரை
நான் கணக்கிட்டதில்லை.
அதுதான்
உன்னை நினைக்க
ஆரம்பித்த மாத்திரத்தில் சட்டென
என் இமைகளுக்கிடையில்
இடம் பெயர்ந்து விடுகிறாயே?


.