Friday, August 7, 2020

நான் பைத்தியமில்லை

என் விழித்திரையில் உன் பிம்பத்தை வைத்துத் தைத்தாற்போல் நான் பார்க்கும் இடமெல்லாம் உன் உருவத்தைத்தான் உணர்கிறேன் …

ஆனால் நான் பைத்தியமில்லை….
ஒரு நாளைக்கு உன் பெயரை
எத்தனை முறை உச்சரிக்கின்றேன் என்று
எனக்கே தெரியவில்லை….
என் உதடுகள் திறப்பதெல்லாம்
உன் பெயரை உச்சரிக்க மட்டுமே…
ஆனால் நான் பைத்தியமில்லை….
என் வீட்டுச்சுவர்களில் ரத்தத்தால்
உன் பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்
அதனை காற்று கூட
தழுவ விடுவதில்லை நான்…
ஆனால் நான் பைத்தியமில்லை…
என்னை உதறிவிட்டுச் சென்றபோது
நீ விட்டுச்சென்ற கொலுசு மணிகளை
என் கைகளில் கட்டிக்கொண்டிருக்கின்றேன் …
ஆனால் நான் பைத்தியமில்லை…
ஆனாலும்
என்னை எல்லோரும்
அப்படித்தான் சொல்கிறார்கள்...!!

No comments:

Post a Comment