Friday, August 7, 2020

தூரமாகப் போய்விட்டாய்...!

 தூரமாகப் போய்விட்டாய்...!

எப்படி விலக்குவேன்,
என் விழிகளில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் உருவங்களை...!
என் உயிர்க்குமிழிகள்
உன்னைத்தேடி
அலைந்து கொண்டிருக்கின்றன...!
அவற்றைக் கேட்டுப்பார்..
சுழன்றுக் கொண்டிருக்கும்
என் இதயச் சூறாவளிகளை
உனக்குச் சொல்லும்..!
எனக்குத் தெரியும்
நீ என்னை
நெருங்கப் போவதில்லையென..!
என் சுவாசம் வாங்கிய காற்று
என்றைக்காவது
உன்னைத் தொடும்..
சுடும்....!
அப்போது உணர்ந்து கொள்வாய்
அந்தக் காதலின் வெப்பத்தை....!!!

No comments:

Post a Comment