Friday, August 7, 2020

என்னைத் திறந்தவளே..!

என்னில் மூழ்கி என்னையெடுத்து எனக்குத் தந்தவள் நீ...!

என் இதயப்பிரதிகளை
நீயும் எடுத்துச் சென்றிருக்கிறாய்..!
ஞாபகமிருக்கிறதா தோழி..!
என் மனப்பிம்பங்களை
உன் விழிகள் படம் பிடித்ததை...!
அவற்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா...!
என் உயிர்க்கூட்டுக்குள்
உடைந்து கிடக்கும்
இதயச்செல்களை ஒட்டவைக்க...!
சிநேகிதியாய் அனுப்பி வை..!
காதலனுக்காக வேண்டாம்
ஒரு
கவிஞனுக்காக அனுப்பி வை....!

No comments:

Post a Comment