Friday, August 7, 2020

ரோஜா நினைவு

என்னை விட்டுத்தான் நீ விலகினாய்.. என் நினைவுகளை விட்டு அல்ல...

ஏன் அவற்றை நீ
அள்ளிச்செல்லவில்லை..
அழிந்துவிடும் என்று நினைத்தாயா...
உன் நினைவுகளை
என் நினைவுகளிலிருந்து
நீக்கவேண்டும் என்ற நினைவே
எனக்கு இல்லை...
அந்த ரோஜா நினைவுகளை
பொசுக்கித் தள்ள
எனக்கு மனமில்லை...
நீதான் கனவுகளை
நிர்மூலமாக்கிக்
கணவனைத் தேடிக்கொண்டாய்...
நான் காகிதங்களில்
கவிதைகளாகத்தான்
கரைந்து கொண்டிருக்கிறேன்...!

No comments:

Post a Comment