Friday, August 7, 2020

கனவுகளில் குவிந்திருப்பவளே

என் கனவுகளில் குவிந்திருப்பவளே

உன் ஜன்னல் பிம்பம்
தோன்றும்போதெல்லாம்
என் இதயம் வேர்த்திருக்கும்
என் விழியின் நிழல் கூட
உன்னைத்தான் பார்த்திருக்கும்
எப்போதாவது விழிக்கும்
உன் புன்னகை கண்டு
என் நெஞ்சம் பூத்திருக்கும்
நீ வீசும் நேசத்துக்காக
என் உயிர் துடிப்புகள் காத்திருக்கும்
என் மொழிகளையெல்லாம்
உன் மௌனங்கள்தான் திருடியிருக்கும்
உன் பாதம்பட்ட இடங்களைத்தான்
என் பார்வைகள் வருடியிருக்கும்
நீ பற்றிப் பிடித்திருக்கும்வரை
என் ஜீவன் என்னுள் உறைந்திருக்கும்
நீ விலகி விடும் கணம்
அது என்னைவிட்டு மறைந்திருக்கும்...

No comments:

Post a Comment