Friday, August 7, 2020

புத்தாண்டு

புத்தாண்டு பரிசாக உனக்கு என்ன தரலாம் என யோசித்தது என் மனம்..

பூக்களைத் தரலாம்
அதை உன் புன்னகையில் வைத்திருக்கிறாய்..
மருதாணிக் கற்றைகளைத் தரலாம்
அதை முகங்களில் பூசியிருக்கிறாய்..
கவிதைப்புத்தகங்கள் தரலாம்
அதை உன் கண்களில் வைத்திருக்கின்றாய்..
சிந்தித்து சிந்தித்து
சித்தம் கலங்கிப்போனது..
இதயத்தையாவது பெயர்த்தெடுத்து
அனுப்பியிருக்கலாம்.
உனக்கு அசைவம் பிடிக்காதே..
இதோ என் ஆன்மாவை அனுப்பியுள்ளேன்
விருப்பமென்றால் வாங்கிக்கொள்
இல்லையெனில்
என் மரணச்செய்தியை தாங்கிக்கொள் ...

No comments:

Post a Comment