Friday, August 7, 2020

வாலிபத்துக்கு வண்ணம் கொடுத்தவள்

உன்னை உணரும்முன் காதலை உணர்ந்தேன் ராசாத்தி..

உணர்ந்தபோதெல்லாம்
இதயத்தில் பற்றியது ரோஜாத்தீ..
உன் மௌனம் கேட்டு கேட்டே
ஊமையானேன் ராசாத்தி..
உன் நினைவு தீண்டும்போதெல்லாம் வரும்
கண்ணீரை மறைப்பேன் விழிசாத்தி..
உன் உடலை நான் எப்பொழுதும்
ரசித்ததில்லை ராசாத்தி..
உன் உதடுகளை நினக்கும்பொழுது மட்டும்
என்னுள் பரவும் பசலைத்தீ..
என் வாலிபத்துக்கு வண்ணம்
கொடுத்தவள் நீதான் ராசாத்தி..
நீ மறந்துவிட்ட அந்த நினைவுகளை
நெஞ்சில் வைத்திருக்கிறேன் பூச்சுத்தி..
கடைசி மூச்சு வரை உன்
காதல் சொல்வேன் ராசாத்தி..
அது போனபின்னே
உன்னை விட்டுச்செல்வேன் ஊரைச்சுத்தி..

No comments:

Post a Comment