Friday, August 7, 2020

காத்திருப்பேன் தனியே

கருங்கூந்தல் அசைய வந்த பூங்குயிலே.. என் மனப்பந்தல் சரிந்து போனதெங்கே...

தென்றலைத் துழாவி
தேனாய் வந்தாய்..
உன் தேகத்தை குவித்து
ஒரு பார்வை தந்தாய்...
நீ விட்டுசென்ற வாசங்கள்
இங்கே மணக்கும்..
அவற்றை சுவாசிக்கும்போதேல்லாம்
ஏனோ என் மனம் கணக்கும்...
நீ தீண்டிய கிளிஞ்சல்களை
கடல் வந்து தேடுதடி..
அவற்றின் அலைகள் கூட
உனது சந்தம் பாடுதடி...
எப்பொழுது திரும்பி வருவாய்
என் கனியே..
அதுவரை காத்திருப்பேன்
நான் தனியே....!

No comments:

Post a Comment