Friday, August 7, 2020

அர்த்தமற்றவர்களின் புலம்பல்

உனக்கு அவ்வளவாக கவிதைகள் பிடிப்பதில்லை

கவிதையைத் திட்டுகிறாய்..
உன்னையே நீ திட்டலாமா...!
காரணம் கேட்டால்
கவிதை வயிற்றுக்கு
சோறுபோடாது என்கிறாய்..
கவிதை, காதலுக்கு சோறு போடும்..!
கவிதை அர்த்தமற்றவர்களின்
புலம்பல் என்கிறாய்..
உன் பெயரை உச்சரிப்பவர்கள்
அர்த்தமற்றவர்களா என்ன..!
உருப்படியாக எதாவது
செய்யுங்கள் என்கிறாய்..
உன்னை காதலிப்பதை
வேறு என்னவென்று நினைத்தாய் !!!

No comments:

Post a Comment