Thursday, July 5, 2012

நான்கூட இருப்பதில்லை என் அருகில்




நீ நேரில் வருவதை விட
என் கனவில் வருவதையே
அதிகம் விரும்புகிறேன்.
அதில்தான்
உன் புன்னகையை
காணமுடிகிறது.





என் முகம் எடுத்துத் துடைத்துக்கொள்,
உன் நிழலில் படிந்த
வியர்வைத் துளிகளை.





என் பார்வைகளில்
எப்போதும்
தடுமாற்றம் இருந்ததில்லை,
இந்த கழுத்துச் சங்கிலி
எனக்கு எப்படி இருக்கிறது
என நீ கேட்டபொழுது தவிர.







நீ என்னருகில்
இருப்பது போல்
நான்கூட இருப்பதில்லை
என் அருகில்.