Friday, August 7, 2020

நிழல்களை சேகரித்தவன்

உன் நிழல்களை சேகரித்தவன் நான்...

கொலுசு மணிகளை மோதவிட்டு
அசையும் உன் நினைவு,
என்னுள் புகுந்த ஆன்மா..
.
என் இதயச்செல்களை
சுரண்டிப் பார்ப்பதில்
அப்படிஎன்ன சந்தோஷம்
உனக்கு...
உனக்காக எழுதிய
கவிதைகளை வைத்திருந்தால்
தொல்காப்பியம் கூட
தோற்றுப்போயிருக்கும்...
உன் தூரப்பார்வையில் மட்டுமே
தெரிந்தவன் நான்...
என் பார்வைகளைப் புதைத்து
நீரூற்றியவளே...
நீ கிடைக்கவில்லையென்ற
வருத்தம் இல்லை எனக்கு
நான் தொலைந்துபோன
வருத்தம்தான்...
என்றைக்காவது என்னை
கண்டுபிடித்துவிடுவேன் - பிறகு
நிச்சயமாக மீண்டும் தொலையமாட்டேன்
உன்னிலும் கூட...!!!

No comments:

Post a Comment