Friday, August 7, 2020

பழைய நினைவுகள்...

பசுமரத்து ஆணியாய் பதிந்து போன என் பழைய நினைவுகள்...

ஆற்றங்கரையில் ஒன்றாக
அமர்ந்து மீன் பிடித்ததும்..
முழங்கால்கள் நனைய
நீரில் விளையாடியதும்..
கூடி உட்கார்ந்து
கூட்டாஞ்சோறு ஆக்கியதும்..
உனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததும்
எனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததும்..
பசு மரத்து ஆணியாய்
என் மனதில்....
தொட்டுக்கொண்ட
அந்த ஸ்பரிசங்கள்
அப்போது விளங்காவிடினும்
பிறகு புரிந்து போனதடி எனக்கு..
உனக்கு அது புரியும் முன்னே
நீ வேறொருவன் வீட்டுக்கு
விளக்கேற்றச் சென்றுவிட்டாய்..
எனக்கும் என் நிழலுக்கும்
இடையில் நீ வாழ்ந்து விட்டுப்
போயிருந்தாலும்
என் உயிர்க்கற்றைகளை
உறிஞ்சிச் சென்றுவிட்டாய்...
என்றைக்காவது நீ திரும்பி வருவாயென
இப்போதும் உனக்காக
கூட்டாஞ் சோறு ஆக்கிக் கொண்டு
கன்னத்தில் கைதாங்கி
உட்கார்ந்திருக்கின்றேன்
என் கல்லறை மீது...

No comments:

Post a Comment