ஒரு டைரியின் கைதி
என் டைரியின் சில பக்கங்கள்
Sunday, September 9, 2012
நம் காதலுக்கு நான் மட்டுமே பலி
உன் வார்த்தைகளை எப்போதும்
நான் மதிக்கிறேன்.
என்னை நினை சொன்னது நீதான்.
மறந்துவிடு என சொல்லவாவது
ஒரு முறை வந்து போ
ஒரு நாள் அழுவாய்
என்னை நினைத்து.
உன்னை நினைத்து
அழும் என்னை போல.
உன் விலகல்
எனக்கு மட்டுமே வலி
நம் காதலுக்கு
நான் மட்டுமே பலி.
ஆற்று மணலில் முன்பு
நாம் தொலைத்த தடம் தேடி
இப்போது நான் மட்டும்..
Sunday, September 2, 2012
நினைக்காமல் என்னால் இருக்கமுடியும்
உன்னை நினைக்காமல்
வேண்டுமானால்
என்னால் இருக்கமுடியும்.
உன்னை மறந்துவிட்டெல்லாம்
என்னால் இருக்கமுடியாது.
கடிதங்களை கிழித்து போட்டுவிடு
எனச் சொல்லிப் போனாய்.
உனக்கு வேண்டுமானால்
அவை வேதனைகளாக இருக்கலாம்.
அவைதான் எனக்கு வேதங்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)