Friday, August 7, 2020

மின்சாரப்பார்வை

சிதறி விழும் நினைவுத்துளிகளில் உன் முகம் தேடினேன்.. அலட்சியங்களை அடுக்கி வைத்திருந்த உன் கண்கள் மட்டும் தென்பட்டது..

அந்த மின்சாரப்பார்வையில்
உருகிப்போனதுதான் என் இதயம்..
மீண்டும் உருப்பெறவேயில்லை..
என்றைக்கோ
உன்னை விட்டுப் பிரிந்தேன்..
நீ விட்டெறிந்த என்னைப் பொறுக்கிக்கொண்டு.....
நீ கீறிச்சென்ற காயங்கள்
வேண்டுமானால் மறைந்திருக்கலாம்..
வடுக்கள் மறையப்போவதில்லை..
அதில்தான்..
உன்னை நினைவுப்படுத்துவதும்
நான் அவ்வப்போது தடுக்கி விழுவதும்....!!!

No comments:

Post a Comment