Friday, August 7, 2020

என் கவிதைகளின் வார்த்தைகள் நீ

என் கவிதைகளின் வார்த்தைகள் நீ

உன் கனவுகளின்
பிம்பம் நான்..
நம் மொழிகள் சந்திக்க
தவமிருந்தேன்..
நம் விழிகளின் சந்திப்பிலேயே
உடைந்து போனேன்..
என்னைப் பார்த்தால்
உன் கொலுசுகள் கூட
மௌனம் கொள்கிறது..
உன் நிழல் நகரும்
ஓசை மட்டுமே
என் காதில் கேட்கிறது..
கடிதங்கள் கிழித்தெறியத்தான்
ஆண்டவன் உனக்கு
கைகள் கொடுத்தானா..
அலட்சியங்களை
அவிழ்த்து விடத்தான் உன்
கண்கள் படைத்தானா..
காதலை ஏற்க ஏன் மறுக்கிறாய்..
உன் இதயத்தில் கேட்டும் என்னை
ஏன் வெறுக்கிறாய்..
புரிந்து கொள்ளும் சக்தி
உன் உள்ளத்திற்கு
இல்லாமல் போயிருக்கலாம்..
எரிந்துவிடும் சக்தி
என் உடம்பிற்கு உண்டு..

No comments:

Post a Comment