Wednesday, January 25, 2012

உன் நிழலும் அழகாய்தானிருக்கிறது




மழையில் நனைந்த
உனக்கு எதுவும் ஆகவில்லை.
நீ நனைவதை பார்த்த
எனக்கு எப்படி வந்தது
குளிர் காய்ச்சல் ?








காற்றில் பறக்கும் கூந்தலை
சரி செய்கிறாய்,
என் மனதை கண்டபடி
கலைத்துவிட்டு.




நீ மட்டுமல்ல
உன் நிழலும் அழகாய்தானிருக்கிறது











விடிந்துவிட்டது எழுந்திரு
போதும் என் விழிகளில்
நீ உறங்கியது










நீ என்னை மட்டுமே பார்க்கவேண்டும்
அதனாலதான்
உன் புகைப்படத்தைகூட
யாருக்கும் தருவதில்லை
நான்.