Monday, October 1, 2012

என் இதயத்தின் நான்கு அறைகளிலும் நீ


என்னை ஏற்றுக்
கொள்ளாவிட்டாலும்
பரவாயில்லை.
என் காதலையாவது
ஏற்றுக்கொள்.








ஒரு கணமேனும்
உன்னை மறந்துவிட ஆசை.
நான் என்னைப் பற்றி
நினைத்துப் பார்த்து
வெகு நாளாயிற்று.







உன் அறைக்குள்
என் வரவை தடுக்கிறாய்.
என் இதயத்தின்
நான்கு அறைகளிலும்
நீ இருப்பதை அறிவாயா?










தினம் தினம் புதுப் புது உடைகள்

மாற்றிகொள்கிறாய்.
மனதை மட்டும் அப்படியே
வைத்துக்கொண்டு.



No comments:

Post a Comment