Friday, August 7, 2020

உனக்காகத்தான் உலகில் விழுந்தேன்

உனக்காகத்தான் உலகில் விழுந்தேன்...

உன் குரல் கேட்க
செவிகள் மலர்ந்தேன்...
உன் முகம் பார்க்க
விழிகள் திறந்தேன்...
உன்னைக் காணாமல்
கதறி அழுதேன்...
உன் வாசம்
நுகர்ந்து சிரித்தேன்...
உனைப் பார்த்து விடலாம்
என்ற நம்பிக்கையில் வளர்ந்தேன்...
நீ விரும்புவாய் என
நினைத்து விரும்பினேன்...
காலங்கள் ஓடிக்கொண்டிருக்க
காத்திருக்கிறேன்...
இப்பொழுதான் நீ
இங்கில்லை என அறிகிறேன்...
உன்னைத்தேடி உலகைவிட்டு
இதோ வருகிறேன்...

No comments:

Post a Comment