Thursday, April 12, 2012

உன் நினைவின் பாரம் தாங்காமல்




நடக்கையில் புதைய
முற்படுகின்றன கால்கள்
உன் நினைவின்
பாரம் தாங்காமல்.








என் கடிதங்கள் எதற்குமே
பதில் எழுதியதில்லை
நீ.
தயக்கம் என் நினைத்திருந்தேன்.
பிறகுதான் புரிந்தது
இது தற்காப்பு என்று.




இதய மாற்று அறுவை சிகிச்சை
கடினம் என
கேள்விபட்டிருக்கிறேன்.
உனக்கு மட்டும்
அது எப்படி சுலபமாயிற்று?







உயிர்களை கொல்வது பாவம்
என்று அடிக்கடி சொலவாய்.
என் விஷயத்தில் உனக்கு
ஏன் அது தோன்றவில்லை.




No comments:

Post a Comment