Thursday, March 22, 2012

நீ காதலித்த எதையாவது கொடு


நான் உன் கதவை தட்டவில்லை.
ஜன்னலை தட்டுகிறேன்.

விழிகள் மூடிக்கொள்ளத்தான்
இமைகள்.
இதயத்தையும்
ஏன் இமைகளால் மூடுகிறாய்.

நான் உன் முகம்
பார்க்க கேட்கவில்லை
உன் முகம் பார்த்த
கண்ணாடி பார்க்கக் கேட்கிறேன்.

நான்
உன் காதல் கேட்கவில்லை.
நீ காதலித்த
எதையாவது கொடு
என கேட்கிறேன்.

No comments:

Post a Comment