Sunday, June 24, 2012

இதயத்தை எங்கு கழற்றி வைத்தாய்





நீ விலகிச் சென்றது
எனக்கு வருத்தமில்லை.
என்னை நேசித்த
உன் இதயத்தை
எங்கு கழற்றி வைத்தாய்
என்பதை மட்டும்
சொல்லிவிட்டு செல்.





தூறலின் போது தொடங்கி
மழை வரும்முன்
முடிந்துபோனதோ
நம் வசந்த காலம்.








வண்ணங்கள்
உன்னை நினைவுபடுத்தும்,
உன் சிவப்பு இதழாகவோ
உன் கருப்பு இதயமாகவோ



No comments:

Post a Comment