Saturday, June 2, 2012

நீ இமை மூடும் கணம்



என் சிறிய கவிதைகள்
உன் நீண்ட நெருக்கத்தில்.
என் நீண்ட கவிதைகள்
உன் சிறிய பிரிவில்.



நம் சந்திப்புகள் பெரும்பாலும்
என் கவிதைகளில் முடியும்.
என் கவிதைகள் பெரும்பாலும்
சோகத்தில் முடியும்








என் பார்வைகள் பறிபோகும்
நீ இமை மூடும் கணம்.

No comments:

Post a Comment